ஆசையோடு கட்டிய சொந்த வீடு - குடி போவதற்குள் நடந்த விபரீதம் - புலம்பும் ஊர் மக்கள்

Update: 2024-08-01 16:12 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்த நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த ஷிஹாபு உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அத்திச்சால் பகுதியை சேர்ந்த 35 வயதான ஷிஹாபு சூரல்மழை பகுதியில் இஸ்லாமிய பள்ளிவாசலில் பணியாற்றி வந்த நிலையில், நிலசரிவில் பள்ளிவாசல் அடியோடு அடித்து செல்லப்பட்டது. இதில் ஷிஹாபு உயிரிழந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டு சொந்த ஊரான அத்திச்சால் பகுதிக்கு உடல் கொண்டுவரப்பட்டது. உடல் முழுவதும் சிதைந்து இருந்ததால், உறவினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உடனடியாக இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்