நாடே உற்றுநோக்கும் கெஜ்ரிவால் வழக்கு - தீர்ப்பு என்ன?

Update: 2024-09-12 11:49 GMT

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய கெஜ்ரிவாலின் மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்றார். சிபிஐயும் தனியாக விசாரிக்க, சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதுகுறித்த காரசாரமான விவாதம் 5 ஆம் தேதி முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்