ஓமன் விபத்தில் சிக்கிய தமிழர்.. "5 நாள் ஆகியும் எந்த துப்பும் இல்லை.." கலெக்டர் ஆபிஸில் தஞ்சம்

Update: 2024-07-21 06:13 GMT

ஓமன் கடற்பகுதியில் கப்பல் விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழிலரசி என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவர் தனஞ்ஜெயன் சென்ற கப்பல், 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதாகவும், தனது கணவரை மீட்க‌க் கோரி 4 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த‌தாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் ஆதித்ய செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், தனஞ்ஜெயனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து எழிலரசி போராட்டத்தை கைவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்