ஒரே நேரத்தில் பரவும் உயிர் எடுக்கும் 2 வைரஸ்கள்.. அபாய லிஸ்டில் 300 பேர்

Update: 2024-09-20 10:41 GMT

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா மற்றும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் மலப்புரத்தில் நிபா தொடர்பு பட்டியலில் தற்போது 267 பேர் உள்ளனர். இதுவரை பரிசோதிக்கப்பட்ட 37 மாதிரிகளும் பாதிப்பில்லை என்று கண்டறியப்பட்டிருப்பது.

தற்போது, ​​குரங்கம்மை பாதிப்புக்குள்ளான இளைஞருடனான தொடர்பு பட்டியலில் 23 பேர் உள்ளனர்.

குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட நபர் பயணித்த விமானத்தில் உடன் பயணித்த 43 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கேரளா அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை வைரஸில் எந்த வகை வைரஸ் பாதித்துள்ளது என கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்