நடு வழியில் திகைத்து நின்ற குடும்பம்..உதவிக்கரம் நீட்டிய நல் உள்ளங்கள் - வைரலாகும் காட்சிகள்

Update: 2024-09-17 08:34 GMT

கேரள மாநிலம் திருவல்லாவில் கார் டயர் வெடித்து நடுவழியில் பரிதவித்த குடும்பத்திற்கு உதவிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காரில் மாற்று டயர் காணப்பட்டாலும் அதை பொருத்துவதற்கு டயர் பழுது பார்க்கும் ஊழியரின் உதவி தேவைப்பட்டது. ஆனால், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அந்த குடும்பம் செய்வதறியாது திகைத்து நின்றது...

அந்த சமயம் அவ்வழியே வந்த ஹைவே பேட்ரல் போலீசார் தாங்களே முன்வந்து மாற்று டயரைப் பொருத்திக் கொடுத்து உதவியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்