கேரளா புறப்பட்ட அம்மனை பார்த்து உருகி நின்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

Update: 2024-09-30 07:36 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் விக்ரகம், தமிழக - கேரள போலீசார் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன், பேண்டு வாத்தியங்கள் முழங்க முத்துக்குடைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்