கணவன் ஓய்வுபெற்ற அதே நாள் அதே அரசு பதவியை ஏற்கும் மனைவி.. வரலாற்றில் அபூர்வ நிகழ்வு

Update: 2024-08-22 10:09 GMT

கேரளாவில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வரும் கணவர் பதவி ஓய்வு பெறவுள்ள நிலையில், அந்த பதவியை மனைவி ஏற்கவுள்ளார்.

கேரள அரசின் வரலாற்றில் இந்த அரிய நிகழ்வு, வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கேரள முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வரும் டாக்டர் வேணு, வரும் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அதே நாளில், அவருடைய மனைவி சாரதா முரளிதரன், அந்தப் பதவியை ஏற்க உள்ளார்.

தற்போது திட்டப்பிரிவு கூடுதல் முதன்மை செயலாளராக சாரதா முரளிதரன் பதவி வகித்து வரும் நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், அவரை புதிய முதன்மைச் செயலாளராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

கணவன் வகித்த பதவியை மனைவி ஏற்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்