``பெரும் பழி..'' இந்தியாவை சீண்டிய கனடா.. ``ஆதாரம்..'' சிக்கலில் ட்ரூடோ...

Update: 2024-10-17 17:40 GMT

இந்தியா, கனடா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த விஷயத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளதாக

குறிப்பிட்டார். 2023 செப்டம்பர் முதல் கனடா அரசாங்கம்

தங்களுடன் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் ஆனால் அதை நிருபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தை அளிக்கவில்லை என்றார். இந்திய தூதரக

அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தாங்கள்

இயல்பாகவே மறுப்பதாக அவர் தெரிவித்தார். தேடப்படும்

குற்றவாளிகள் தொடர்பாக கனடாவுக்கு 26 நாடு கடத்தல்

கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால்

இது தொடர்பாக கனடா இதுவரை எந்த நடவடிக்கையும்

எடுக்கவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்