இருட்டும் நேரத்தில் கேட்ட சத்தம்.. சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்த கோரம்.. தொடரும் மீட்பு பணி

Update: 2024-09-08 04:11 GMT

இருட்டும் நேரத்தில் கேட்ட சத்தம்.. சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்த கோரம்.. தொடரும் மீட்பு பணி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர். டிரான்ஸ் போர்ட் நகரில் உள்ள 3 அடுக்குமாடி கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள 28 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்