டெல்லி முதல்வர் அதிஷியிடம் கோரிக்கை வைத்த கெஜ்ரிவால்

Update: 2024-10-07 09:29 GMT

கடந்த ஓராண்டாக டெல்லி அரசின் அனைத்து பணிகளையும் பாஜக முடக்கியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த ஓராண்டாக பாஜக, தமது அமைச்சர்களை சதி செய்து சிறையில் அடைத்ததாகவும், டெல்லி அரசின் வேலையை நிறுத்தி, ஸ்தம்பிக்க வைக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாஜகவினர் அனைத்து பொதுநல பணிகளையும் நிறுத்தியதாகவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்போம் என்றார். தான் சிறைக்கு சென்ற பிறகு, பாஜகவினர் டெல்லி மக்களை துன்புறுத்தினர், மாநில அரசின் வேலையை நிறுத்தினார்கள் என்றார். சாலை சீரமைப்பு பணியையும் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டினார். உடைந்த சாலைகளை

விரைவில் சீரமைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர்

அதிஷியிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார். சாலைகள் உடைந்த இடங்களில் எல்லாம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மொஹல்லா கிளினிக்குகளில் மருந்துகள் இல்லை என்றும், இவற்றை சீர் செய்வோம் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்