நாளை பொறுப்பேற்கிறார் ராணுவ துணை தலைமை தளபதி

இந்திய ராணுவத்தின் புதிய துணை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-04-30 03:18 GMT
நாளை பொறுப்பேற்கிறார் ராணுவ துணை தலைமை தளபதி

இந்திய ராணுவத்தின் புதிய துணை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து காலியாக இருந்த துணைத்தளபதி பணியிடத்திற்கு ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் நபர் பி.எஸ் ராஜூ ஆவார்.

பி.எஸ் ராஜூ, மே ஒன்றாம் தேதி ராணுவ துணை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்