"மாநில அரசுகளின் மேல் பழிசுமத்த வேண்டாம்..." பிரதமர் பேச்சுக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு

எரிபொருள் விலை உயர்வால், மக்கள் படும் துன்பங்களை மறைக்க, மாநில அரசுகளின் மேல் பழிசுமத்த வேண்டாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-29 02:41 GMT
எரிபொருள் விலை உயர்வால், மக்கள் படும் துன்பங்களை மறைக்க, மாநில அரசுகளின் மேல் பழிசுமத்த வேண்டாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதனிடையே, மத்திய அரசு கலால் வரியை குறைத்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழகம், கேரளா, தெலுங்கான உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில், பிரதமரின் கருத்துக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில், எரிபொருள் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகளின் மேல் பழிசுமத்த வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்