பிரபல விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து மது விநியோகம்

கேரள மாநிலம் கொச்சியில் வெளிநாட்டு பெண்களை வைத்து மதுபானம் விநியோகித்ததால், தனியார் விடுதி பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-16 03:41 GMT
கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு அருகே பிரபல தனியார் விடுதி அமைந்துள்ளது. பார் வசதி கொண்ட இந்த தனியார் விடுதிக்கு கேரள திரை பிரபலங்கள் பலரும் வருவது வழக்கம். இந்நிலையில், இந்த பாரில் வெளிநாட்டில் இருந்து பெண்களை அழைத்து வந்து, வாடிக்கையாளர்களுக்கு மது வகைளை விநியோகித்து வந்துள்ளனர். ஆனால், கேரள கலால் விதிப்படி மது விநியோகத்திற்கு பெண்களை பணியமர்த்தக் கூடாது. இதன்படி, திடீரென பாரில் ஆய்வு செய்த, கலால் துறை அதிகாரிகள், கலால் விதிகளை மீறும் செயல் என கூறி, விடுதி மேலாளரை கைது செய்தனர். மேலும், பார் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை என  தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்