எம்.எல்.ஏ.வாக வலம் வரும் மகன் .. துப்புரவு பணி செய்யும் தாய் ..!

சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரின் தாய் அரசுப்பள்ளியை சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்.

Update: 2022-03-14 09:07 GMT
சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரின் தாய் அரசுப்பள்ளியை சுத்தம் செய்யும்  பணியை செய்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி பதாவுர் தொகுதியில் 37 ஆயிரத்து 550 வாக்குகளில்  தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கிய லாப்சிங் உகோக் வெற்றிப்பெற்றார். முதலமைச்சரை தோற்கடித்து லாப் சிங் எம்.எல்.ஏ.வாக வலம் வந்தாலும், அவரின் தாயான பல்தேவ் கவுர் அரசுப்பள்ளியை சுத்தம் செய்து வருகிறார். தனது மகன் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் பள்ளியை சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்து செய்வேன் என பல்வேல் கவுர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்