பலரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகை கைது !

சர்வதேச புத்தக கண்காட்சியில் பலரிடம் பிக்பாக்கெட் அடித்த பெங்காலி நடிகை கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-14 06:20 GMT
சர்வதேச புத்தக கண்காட்சியில் பலரிடம் பிக்பாக்கெட் அடித்த பெங்காலி நடிகை கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த ரூபா தத்தா, குப்பை தொட்டியில் பர்ஸ் ஒன்றை வீசுவதை போலீசார் பார்த்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது சரியாக பதிலளிக்காததால் அவரது கைப்பை சோதனையிடப்பட்டது. அதில் பலரது பர்ஸ்களும், 75 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்தது. தொடர் விசாரணையில் புத்தக கண்காட்சியில் வந்தவர்களின் பர்ஸை நடிகை பிக்பாக்கெட் அடித்தது அம்பலமானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைதான நடிகை வங்கமொழி மற்றும் இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமாக வலம் வந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்