இந்திய கடற்படையின் மிலன் கூட்டு பயிற்சி | Thanthi Tv

இந்திய கடற்படையின் மிலன் கூட்டு பயிற்சி 4 நாட்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவு

Update: 2022-03-05 10:51 GMT
இந்திய கடற்படை மேற்கொண்ட மிலன் 2022 கூட்டு பயிற்சி நிறைவு பெற்றது. விசாகப்பட்டினம் கடற்கடையில் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய 11வது மிலன் கூட்டுப்பயிற்சியில் 26 கப்பல்கள் 21 விமானங்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் பங்கேற்றது. இதில் துப்பாக்கிச்சூடு, நீர்மூழ்கி கப்பலின் எதிர் தாக்குதல் மற்றும் ஹெலிகாப்டர்களின் தரையிறக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் வீரர்கள் பயிற்சி எடுத்தனர். கடல்சார் பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுப்பயிற்சியின் நிறைவு விழாவில் வெளிநாட்டை சேர்ந்த 6 கப்பல்கள் காணொலி மூலம் பங்கேற்றன. 
Tags:    

மேலும் செய்திகள்