``வெளியுலகம் வராத பிரபல தமிழ் நடிகையின் தனிப்பட்ட போட்டோஸ்'' - நடுங்கவிடும் நடிகையின் முன்னாள் PA..?

Update: 2024-10-02 10:39 GMT

``வெளியுலகம் வராத பிரபல தமிழ் நடிகையின் தனிப்பட்ட போட்டோஸ்'' - ரூ.2 கோடி கேட்டு நடுங்கவிடும் நடிகையின்

முன்னாள் PA..?


நீதிமன்ற தடை உத்தரவை மீறி தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் தன்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் பரபரப்புத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

2022ல் தனது வீட்டில் இருந்த18 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் திருடு போனதாக தான் தந்த புகாரை திரும்ப பெறும்படி சுபாஷ் தனக்கு மிரட்டல் விடுத்ததோடு, தனக்கெதிராக காவல் நிலையத்திலும் பொய்யான புகார் அளித்தார் என்றும்

தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட வெளிவராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும், பெயரை அவமதிக்கும் வகையில் பல பொய் செய்திகளை வெளியிட்டும் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும்,

இதே போல் சுபாஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சுபாஷ் தன்னை பற்றி பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து சுபாஷ் தன்னை பற்றி, அவதுறான, பெய்யான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகவும்,

வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனது வீட்டில் சுபாஷ் சாதி ரீதியாக நடத்தப்பட்டதாக 10 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக தெரிவித்துள்ளார்

தொடர்ந்து தன்னுடைய படங்கள் வெளிவரும் போதெல்லாம் இவ்வாறு சுபாஷ் தரப்பால் மிரட்டப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுபாஷ் மீதான புகாரை திரும்ப பெற்று, 2 கோடி

ரூபாய் வழங்க வேண்டும் எனவும், கொலை மிரட்டலும் விடப்பட்டதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்