"அவரது பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்" - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 71 வது சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டி தொடங்கி உள்ளது.

Update: 2022-04-04 05:19 GMT
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 71 வது சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டி தொடங்கி உள்ளது.

தேசிய அளவிலான சீனியர் கூடைப்பந்து போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக ஏப்ரல் 3 முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கேரளா உள்பட16 மாநிலங்களில் இருந்து ஆண்கள் அணிகள் மற்றும் 15 மாநிலங்களில் இருந்து பெண்கள் அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். போட்டியை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கணேஷ், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்