திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் கார்த்தி - மெய்மறந்து நின்ற மக்கள்

Update: 2024-09-28 02:32 GMT

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'செம்பொழில்' என்ற பெயரில் கிராமத்து திருவிழா தொடங்கியது. செப்டம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவை, நடிகரும், உழவன் பவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி தொடங்கி வைத்தார். மேலும் அங்கு காட்சிப்படுத்திய நாட்டு மாடு, ஆடு வகைகளை பார்வையிட்ட கார்த்தி, நாட்டுப்புற கலைஞர்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார். தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, சென்னையில்தான் நுகர்வோர்கள் அதிகம் உள்ளதாகவும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை கொண்டு வந்துள்ளதால் மக்கள் அதனை பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்