இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் சாதாரண மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு தனது விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அழைத்து செல்லும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். முன்னதாக அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பப்படும் தனது டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோ வெற்றிகரமாக தரையிறங்கினால், 2029லேயே செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் கால்பதிக்கக்கூடும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.