காசாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்/பேரக்குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு கண்ணீர்

Update: 2024-05-14 09:02 GMT

காசாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர், உயிரிழந்த தனது பேரக்குழந்தைகளை கண்டு அதிர்ச்சியில் கதறியது காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ உதவிகளை அளிக்க ஏராளமானோர் தன்னார்வலராக பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதே போன்று, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் அலி கலீல் என்பவரும் பலரை காப்பாற்றி வந்தார். அப்போது, தாக்குதலில் தனது பேரக்குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து, அதிர்ச்சியில் கீழே சரிந்து கதறி கண்ணீர் வடித்தார். பேரக்குழந்தைகள் இறந்தாலும், தொடர்ந்து மக்களை காப்பாற்ற அவர் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்