தீ விபத்தில் வீடுகளை இழந்த இருளர் இன மக்கள்.. - 15 நாட்களாக மரத்தடியில் வசிக்கும் அவலம்

Update: 2024-07-04 01:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏற்பட்ட தீ விபத்தில், இருளர் இன மக்களின் 2 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளன. இதனால் கடந்த 15 நாட்களாக அவர்கள் மரத்தடியில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கும் நிலை இருந்து வருகிறது. அரியம்பூண்டி கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களும் வீட்டு மனைப்பட்டா வழங்கி, அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்