"மனித உயிர் விலை ரூ.2000 ரூபாயா?".. சென்னை அருகே நடந்த அதிர்ச்சி - மக்கள் சொன்ன பகீர் தகவல்

Update: 2024-09-16 15:52 GMT

சென்னை எண்ணூரில் 2023 டிசம்பரில் கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிந்தது. இதனையடுத்து ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலை மூடப்பட்டது. இது குறித்த வழக்கில் நிபந்தனைகளுடன் கோரமண்டல் ஆலையை திறக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அனுமதித்தது. வழிக்காட்டல் படி ஆலை திறைக்கப்பட்டதாக கூறப்படும் வேளையில், மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் ஆலையில் உற்பத்தியை தொடங்கவில்லை என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. இந்த சூழலில் ஆலையை திறப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதற்காக இரவு நேரங்களில் கிராமங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்