தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். 8ம் வகுப்பு படித்து வரும் கூலித்தொழிலாளியின் மகள் வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில், ஆசிரியர்கள் விசாரித்தபோது, தந்தை பாலியல் தொல்லை அளித்ததை அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.