வங்கியில் இருந்த ரூ.23 லட்சம் மாயம் - வங்கி ஊழியர்கள் சொன்ன `ஷாக் ரிப்ளை'

Update: 2024-05-11 03:21 GMT

மூலிகையில் பெட்ரோல் தயாரித்து பிரபலமானவர் ராமர் பிள்ளை. இவரது வங்கி கணக்கில் இருந்த 23 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக புகார் அளித்து இருக்கிறார். மூலிகை பெட்ரோல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரனை நடத்திய போது, 23 லட்சம் ரூபாய் இருந்த அவரது வங்கி கணக்கை முடக்கியது. இத தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், 23 வருடத்திற்கான வட்டியை ராமர்பிள்ளைக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சம்பந்த பட்ட வங்கிக்கு சென்று ராமர் பிள்ளை பணத்தை கேட்டபோது பணத்தை காணோம் என ஊழியர்கள் தெரிவித்தாக கூறியுள்ளார். மேலும் இத தொடர்பாக வங்கி மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்ப பெற்று தருமாறு சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றையும் ராமர் பிள்ளை அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்