சபாநாயகரின் சொந்த மண்ணில் புதிய பேருந்துகள்.. "இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான்.." லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர்

Update: 2024-07-21 02:54 GMT

அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் குறைந்த அளவில் வாங்கியதால்தான், பழைய பேருந்துகள் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், புதிதாக வழங்கப்பட்ட 27 பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று, கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர், பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர், இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்