காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கோரிய மனு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-12-07 14:36 GMT

காவிரி-வைகை-கு ண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கோரிய கர்நாடக அரசின் மனுவை, ஜனவரி இறுதி வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் சார்பில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசின் மனுவை ஜனவரி இறுதி வாரத்தில் விசாரணை எடுத்துக் கொள்வதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்