ஒற்றை ஆளாய் போராடி... தெறித்து ஓடவிட்ட பெண்... BP ஏற்றும் வீடியோ

Update: 2024-10-02 13:36 GMT

பஞ்சாபில் தனி ஒரு பெண் 3 கொள்ளையர்களைத் தடுத்து நிறுத்திய சம்பவம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அமிர்தசரஸ் வெர்க்கா எனும் பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஒரு வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதை மொட்டை மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண் பார்த்து விட்டார். கொள்ளையர்கள் வீட்டின் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைய முயன்ற போது துரிதமாக ஓடி கதவை மூடிய அப்பெண் தனி ஆளாக கதவைத் தாங்கிப் பிடித்து சோபாவை இழுத்து கதவோடு சேர்த்து வைத்து திருடர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார் . இறுதிவரை ஒன்றும் செய்ய முடியாமல் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பி ஓடினர்... தனி ஒரு பெண்ணாக கொள்ளையர்களைத் தடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்