அசாதாரணமாக மாறிய இயற்கை.. 6 மணி நேரத்தில் 300 மிமீ மழை.. மூழ்கிய மும்பை.. நாட்டுக்கே வார்னிங் பெல்

Update: 2024-07-08 06:29 GMT

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் 300 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தேரி, குர்லா, பாண்டுப், கிங்ஸ் சர்க்கிள், வைல் பார்லே மற்றும் தாதர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன... சில இடங்களில் மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர்...

கனமழையால் புறநகர் ரயில் சேவைகள் மற்றும் பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டன. உள்ளூர் ரயில் சேவைகளும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, தண்டவாளத்தில் தண்ணீர் குறைந்த பிறகு மீண்டும் துவங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்