அணு அணுவாக சிதைந்த பெண் டாக்டர் நாட்டை உலுக்கிய ஓர் அதிர்ச்சி திருப்பம் கொல்கத்தா கமிஷனர் உடைத்த உண்மை இந்தியாவையே அதிரவிட்ட ஒரு கிஃப்ட்

Update: 2024-09-05 05:31 GMT

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் காவலர்களுக்கு முதுகுத் தண்டை பரிசளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கொல்கத்தாவில் இளம்பெண் பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது...

மருத்துவர்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்...

இவ்விவகாரத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைதாகியுள்ள நிலையில், காவல்துறையின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது...

நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது...

இந்த சூழலில் மருத்துவர்களின் போராட்ட குழு கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் மருத்துவக் குழுவினர் லால்பஜாரில் அமைந்துள்ள கொல்கத்தா போலீஸ் தலைமையகத்திற்கு பேரணியாக சென்று வினீத் கோயலை நேரடியாக சந்தித்து...அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தினர்...

தொடர்ந்து போராட்டக் குழுவினர் செயற்கையான முதுகுத் தண்டு ஒன்றையும் பரிசாக அளித்தனர்...

இந்த வழக்கை விசாரிக்க கொல்கத்தா காவல்துறைக்குத் தைரியம் வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி முதுகுத் தண்டு பரிசளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இவ்வழக்கில் தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் சில குறைபாடுகள் இருப்பதை காவல் ஆணையர் ஏற்றுக்கொண்டார்...

ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேசிய வினீத் கோயல் உயர் அதிகாரிகள் முடிவு என்னவோ அதை ஏற்கத் தயார் என தெரிவித்துள்ளார்...

கொல்கத்தா காவல்துறையைப் பார்த்து முதுகெலும்பு உள்ளதா? என்று கேட்கும் தொணியில் செயற்கை முதுகெலும்பு பரிசளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்