தனுஷ் பட விவகாரம் - ஆர்.கே. செல்வமணி விளக்கம்

Update: 2024-09-18 02:11 GMT

சென்னையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, தனுஷ் திரைப்படத்தின் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். அதன்படி, வண்டர்பார் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட தனுஷின் திரைப்பட படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக தகவல் அளிக்காததால், அப்படத்திற்கு சம்மேளனத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறினார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தயாரிப்பாளரின் வேண்டுகோள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டதால், சம்மேளனம் சார்பில் அப்படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்