ரயில் தண்டவாளத்தில் டயர்கள்..மோப்பம் பிடித்த மோப்பநாய்..100 பேரை பிடித்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Update: 2023-06-05 16:10 GMT

சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவு திருச்சி சமயபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. மேலவாளாடி என்ற இடத்திற்கு வந்தபோது, தண்டவாளத்தில் மர்ம நபர்கள் வைத்திருந்த லாரி டயரில் சிக்கி நடுவழியில் நின்றது. இதனால் சில பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவம் குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், போதிய துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்