காதலியை 35 துண்டுகளாக வெட்டிய கொடூர காதலனுக்கு பாலிகிராபிக் சோதனை.. ஷ்ரத்தா வழக்கில் அதிரடி

Update: 2022-11-21 15:06 GMT

டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் கொலையாளி அப்தாபுக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் காதலி ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி காதலன் அப்தாப் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில்

கொலையாளி அடிக்கடி தகவல்களை மாற்றிக் கூறுவதால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த சோதனைக்கு முன்பாக அவருக்கு பாலிகிராபிக் சோதனை நடத்தப்பட உள்ளதாக தடயவியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படாது என்றும், பாலிகிராபிக் சோதனைக்கு பின்னர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பிறகே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்