பச்சையப்பன் கல்லூரியில் உடைந்த மாணவர்கள் மண்டை... ரூட்டு தல விவகாரத்தில் போர்களமான பொங்கல் விழா...

Update: 2023-01-12 11:24 GMT

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியின் போது திடீரென ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பாரிமுனை ரூட் மாணவர்களுக்கும், திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும் பிராட்வே ரூட் மாணவர்களுக்குமிடையே கல்லூரியில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பானது. இந்த தகராறில் 3 மாணவர்கள் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்