உயிரை பறித்த உதவி.. பணத்தை திருப்பித் தராத உறவினர்கள் - விரக்தியில் இளைஞர் விபரீதம்

Update: 2023-06-08 02:40 GMT

மதுரையில், அவசர உதவிக்கு கொடுத்த பணம் மற்றும் நகைகளை உறவினர் திருப்பித் தராததால், விரக்தியில் இளைஞர் வீடியோ வெளியிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குமார், இவர் நகரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். 2015ம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அங்கு அவருடன் அருகே வசிக்கும் லெட்சுமி என்பவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் நன்கு பழகியதால், 10 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் பணத்தை, அவசர உதவிக்காக லெட்சுமி வீட்டிற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கொடுத்த நகை, பணத்தை குமார் திரும்ப கேட்டபோது, லெட்சுமி குடும்பத்தினர் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த குமார், தனது செல்போனில் உருக்கமாக வீடியோ பதிவிட்டு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு, பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்