எலக்ட்ரிக் வாகன ஷோரூமில் தீ விபத்து.. விடுதியில் இருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

Update: 2022-09-13 08:23 GMT

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தால், தனியார் விடுதியில் தங்கி இருந்த 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடியின் முதல் தளத்தில் ரூபி என்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை நிலையமும், 2வது தளத்தில் சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதியும் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு ஷோரூமில் பற்றிய தீயால் அங்கிருந்த பொருட்களும், மின்சார வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. முதல் தளத்தில் பற்றிய தீயால் எழுந்த புகை அப்பகுதியை சூழ்ந்தது.

இதனால் இரண்டாவது தளத்தின் விடுதியில் தங்கி இருந்தவர்கள் கரும்புகையில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர்.

25 பேர் வரை அந்த விடுதியில் தங்கி இருந்த நிலையில், கரும்புகையால் மூச்சு விடமுடியாமல் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தியதுடன் அங்கிருந்தவர்களை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பற்றியதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்