வீட்டிற்குள் வீசிய துர்நாற்றம்எட்டிப்பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்

Update: 2023-05-09 03:13 GMT

கோவையில், எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை காந்திபுரம் பகுதியில், தனியார் காலியிடத்தில் உள்ள கூரைவீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்ததால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த பெண் யார்? அவர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்