சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்... உள்ளே விழுந்து மாயமான தமிழ் பெண்... வெளியான பகீர் சிசிடிவி காட்சி

Update: 2024-08-23 16:08 GMT

மலேசியாவில் திடீரென நடைபாதையில் ஏற்பட்ட பள்ளத்தில், இந்திய பெண் ஒருவர் விழுந்து மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர் அருகே உள்ள மஸ்ஜித் இந்தியா என்ற இடத்தில், சாலையோர நடைபாதையில் ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நடைபாதையில் பள்ளம் ஏற்பட்டு இந்தியாவை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் உள்ளே விழுந்தார். அருகில் அமர்ந்திருந்தவர்களும் பள்ளத்தில் விழுந்தபோது, துரிதமாக செயல்பட்டு வெளியேறினர். அதே நேரத்தில், 8 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு மண் சரிந்த‌தால், உள்ளே விழுந்த பெண் மாயமாகினார். இதையடுத்து, சிறப்பு மீட்புப் படையினர் பள்ளத்தை தோண்டி, மாயமான பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தில் விழுந்த பெண் தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென பள்ளம் ஏற்பட்டு பெண் விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்