இஸ்ரேல் உருவாக்கிய செயற்கை நிலநடுக்கம்? - இதயத்திலே அடித்த அடி.. ஈரானுக்கு வந்த ஆத்திரம்

Update: 2024-09-28 03:15 GMT

லெபனானில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக லெபனான் தெரிவித்துள்ளது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம், எல்லையில் டாங்கிகளையும் குவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் படை அதிரடி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் கட்டடம் வெடித்து சிதறி தூள், தூளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா தலைமையகத்தில் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வு நகரம் முழுவதும் எதிரொலித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவை குறிவைத்ததே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அவர் தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றும் ஈரான் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்