மீண்டும் தாக்கப்பட்ட இஸ்ரேல்-நடுரோட்டில் எரிந்து கருகும் வாகனங்கள்

Update: 2023-11-03 13:46 GMT

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்கியதில் வடக்கு இஸ்ரேலிய நகரமான கிரியாத் ஷ்மோனாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த மாதம் 20ம் தேதியே லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள கிரியாத் ஷ்மோனாவில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், சிலர் அந்நகரிலேயே தங்கி இருந்த நிலையில், தாக்குதலுக்குப் பிறகான சேத விவரங்கள் வெளியாகவில்லை. ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே நாளுக்கு நாள் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்