இஸ்ரேல் கொடூர தாக்குதல்...திடீரென நிலாவில் தெரிந்த மாற்றம் - அச்சத்தில் உறைந்த மக்கள்

Update: 2024-10-09 06:48 GMT

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் இரவு வானத்தில், நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் உள்ள ஹரேட் ஹ்ரீக் Haret Hreik உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பெய்ரூட்டின் இரவு நேர வானத்தில் நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்