ஈரானுக்கு கடத்தப்படும் இந்தியர்கள்..நாட்டையே நடுங்கவிடும் பிசினஸ்... அதிர்ச்சி வாக்குமூலம்

Update: 2024-07-04 06:41 GMT

ஈரானுக்கு கடத்தப்படும் இந்தியர்கள்

நாட்டையே நடுங்கவிடும் ஒரு பிசினஸ்

மெயின் புள்ளியின் அதிர்ச்சி வாக்குமூலம்

கேரளாவில் இருந்து ஈரானுக்கு ஆட்களை அழைத்து சென்று சிறுநீரகம் மற்றும் கல்லீரல் விற்பனை செய்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது. சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்காக ஈரான் நாட்டுக்கு ஆட்கள் கடத்தப்படுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சி விமான நிலையத்தில் வைத்து சாபித் நாசர் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கொச்சியை சேர்ந்த மது என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஈரானில் பதுங்கி இருப்பதால் அவரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மதுவை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்