பல ஏக்கரை கருக்கிய காட்டுத்தீ.. நீர் அஸ்திரத்தை எடுக்கும் விமானப்படை

Update: 2024-09-13 11:19 GMT

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் நீடிக்கும் காட்டுத்தீயால், பல ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாண்டா குரூஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தொடர் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் செயற்கை மழையை உருவாக்கும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்