அர்ஜென்டினாவை வீழ்த்திய பிரான்ஸ்.. வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் - பாரிசில் பரபரப்பு

Update: 2024-08-03 16:26 GMT

பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா வீரர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடவர் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டிக்குப் பிறகு அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நடுவர்கள் குறுக்கிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்