முப்படைகளின் சார்பில் இங்கிலாந்து பிரதமரருக்கு சிறப்பான வரவேற்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்-ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

Update: 2022-04-22 07:05 GMT
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்-ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதநிலையில், டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அவரை வரவேற்று, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போரிஸ் ஜான்சன், உற்சாக வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான உறவு எப்போதும் இல்லாத அளவிற்கு வலுவடைந்து உள்ளதாக அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்