பறவைக்காக விலையுயர்ந்த காரை அர்ப்பணித்த துபாய் இளவரசர்

துபாய் இளவரசர் ராஷித் பறவைக்காக தனது விலையுயர்ந்த காரை அர்ப்பணித்துள்ளார்.

Update: 2020-08-14 04:46 GMT
கொரோனாத் தொற்றுப்பரவல் காரணமாக துபாயின் பட்டத்து இளவரசர் ராஷித், தனது காரினை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் இருந்த நிலையில், அந்த காரின் முகப்புப் பகுதியில் பறவையொன்று கூடுகட்டியுள்ளது. அந்த கூட்டை கலைக்க விரும்பாத ராஷித், தான் அந்த காரினைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்