கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு.. விபரீத முடிவெடுத்த நபர்.. விசாரணையில் வெளியான உருக்கமான கதை

Update: 2024-09-07 16:35 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த விவசாயி சின்னத்துரை என்பவரது மகன் பிரசாந்த். 27 வயதான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரசாந்த்தை அந்த நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியது. இதனால் ஊரில் வந்து கட்டிட வேலை மற்று காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வேலையும் சரிவர அமையாததால், குடும்ப கஷ்டத்திற்காக திருட்டில் ஈடுபட முடிவெடுத்த அவர், விழுப்புரம் ரெயிலில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து கைது திருவாரூர் ரெயில்வே போலீசார் நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப கஷ்டத்துக்காக நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்