பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் தந்தைக்கு - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-09-07 16:12 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பொம்மன்குட்டை கொள்ளைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜீவா-டயானா தம்பதி. இவர்களுக்கு பிறந்த 8-நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்ததாக வேப்பங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்து ஜே.எம். 1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, ஜீவா வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், டயானா வேலூர் பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்