இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 'ஆப்பிள் ஸ்டோர்' - ஆப்பிள் நிறுவன தலைவர் 'டிம் குக்' தகவல்

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை மையமான 'ஆப்பிள் ஸ்டோர்' தொடங்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் டிம் குக் கூறியுள்ளார்.

Update: 2020-02-27 10:03 GMT
இந்தியாவில், அடுத்த ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை மையமான 'ஆப்பிள் ஸ்டோர்' தொடங்க உள்ளதாக அந்த  நிறுவனத்தின் தலைவர் டிம் குக் கூறியுள்ளார். நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை மையங்கள் மூலம் ஆப்பிள் போன்களை விற்க உள்ளதாக கூறினார். இந்தியாவில், நடப்பாண்டில் ஆன்லைன் மூலம் நேரடி விற்பனை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டில், ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்க உள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் 'டிம் குக்' தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்