நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே பைக் வீலிங் மற்றும் ரேசிங்கில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்டு அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பழைய பேட்டையை சேர்ந்த மதன் பிரகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதன் பிரகாஷ் தன்னை போன்று யாரும் பைக் ரேஸ், மற்றும் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.